வாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜனவரி, 2010

என் இப்போதைய தேவை.



எனக்கு வேறுபாடுகளில் எப்போதும் நம்பிக்கை இல்லை. அது இனம் சார்ந்த மொழி சார்ந்த பால் சார்ந்த நாடு சார்ந்த நிறம் சார்ந்த எந்த வேறுபாடை இருந்தாலும்.

ஆனால் நம்மையும் மீறி சில சார்புகள் நம்முள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை மீறி வர பல சமயம் முடிவதில்லை.என்னளவில்  சிலவற்றை நான் விரும்பி ஏற்றும் கொண்டுள்ளேன்.  அது நான் தமிழன் என்பது.
 காரணம்? தமிழ் சமூகம் பிற சமூகங்களை காட்டிலும் உயர்குணங்கள் கொண்டதா? (அப்படியா என்ன?) இல்லை  அதன் பழமையா? இல்லை என் பிறப்பா? எது எப்படி ஆகினும் என்னை நான் எப்போது தமிழ் பேசும் ஒருவனாக மட்டுமே அடையாளம் காண்கிறேன்.
அதன் பின் தான் எனது எல்லா அடையாளங்களும் வந்து ஒட்டி கொள்கின்றன.

தமிழ் சமூகத்திற்கு   நீண்ட நெடிய மரபு உண்டு. அது எல்லாருக்குள்ளும்  ஒரு அடையாளத்தை பச்சை குத்தி விடுகிறது. வலிய விலக முயற்சிப்பவர்களிடம் கூட.

மும்பை செம்பூரில் ஒரு மளிகை கடையில் சக்தி சாம்பார் பொடி  பொட்டலத்தை  பார்க்கும் போது சட்டென ஒரு சந்தோசம் வரும். இது எனக்கான இடம் என்ற எண்ணம். ஊரெல்லாம் சுத்தி விட்டு வீட்டுக்குள் வரும் போது அம்மா சமையல்கட்டில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்கும் போது ஒரு அன்யோன்ய உணர்வு ஏற்படுமே.. அது போன்ற மிக அகவயமான உணர்வு. அத்தகைய அன்யோன்யம் எனக்கு எப்போதும் தமிழ் சார்ந்த நிலைகளில் நிகழ்வதுண்டு. இது எனக்கானது என்று நான் கற்ப்பித்து கொண்டுள்ள சிலவற்றுள் முதன்மை என் மொழி தான் என்றே தோன்றுகிறது,

என்னை வெளிப்படுத்த எனக்கு தமிழ் தவிர வேறு எதுவும் அந்நிய மொழி தான். என் ஆங்கில வலைப்பூ சிலசமயங்களில் வெறும் சொற்குவியல் என்று தோன்றும். அதிலுள்ள பெரும் பங்கு  என் மொழி திறமை இன்மையை மறைக்க முயன்றதே. சரி, தமிழில் நான் பெரும் மொழி வல்லுநனா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால், மொழி வெறுமனே தொடர்புக்கான  கருவி என்னும் உபயோகத்தை தாண்டி என் இனம் என் பாரம்பரியம் என் அகம் இவற்றின் சான்றாக அமையும் போது 'அட' என்று மனம் பெருமிதம் கொள்ளும். இதை  தவிர தமிழில் என் வலைப்பூவிற்கு  எந்த பெரிய நோக்கமும் இல்லை.

நான் சற்று ஆசுவாசமாய் நடமாட ஒரு வெளி. இது தான் என் இப்போதைய தேவை.

எதையாவது செய்



எழுத என்ன இருக்கிறது?
ஆயிரம பூக்களுக்கு பின்
ஆயிரத்து ஒன்றாம் அரும்பு

எல்லாம் முடிந்து விட்டது என சலிக்கும் போது
ஒரு ஊர்க்குருவி கீச் ஒலி எழுப்பி
சட்டென பறக்கிறது..
அதை என்ன செய்ய?

தின்னத் தின்னப் பசி.
கோப்பை தீரத் தீர தாகம்.

எழுது
படி
அழு
சிரி
ஆடு
அலை
தேடு
புணர்
காண்
கொள்
உணர்

எதையாவது செய்
கொஞ்ச நாள் தானே
இருந்து விட்டு தான் போயேன்..

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நாளை மற்றுமொரு நாளே..



இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டி இருக்ககூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்து இருக்கக்கூடிய அவமானங்கள், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலரை போலவே -- நாளை மற்றுமொரு நாளே. .
(ஜி. நாகராஜன் -- 'நாளை மற்றுமொரு நாளே' புதினத்தில் )

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...