வெள்ளி, 9 ஜூலை, 2010

ராவணனும் குறுந்தொகையும்

 குறுந்தொகை பாடல் ஒன்றுக்கு ஷோபனாவின் நடனம். ராவணனாக ஷோபனா சிதைக்கும் தன் காதல் உணராத சீதை பற்றி கனவு காணும் போது அதற்கு நன்கு பொருந்தி வரும் குறுந்தொகை பாடலுக்கு ஆடுகிறார். 
(சில இடங்களில் பொருளுக்கு தவறாய் அபிநயம் பிடிக்கிறாரோ என்றோரு ஐயம். உ.ம் -- கானம் என்பது காடு என பாடலில் பொருள் படும் போது அவர் காண்பது என்பது போல் அபிநயம் செய்கிறார்) மற்றபடி பாடலில் காதல் ததும்பும் மாலை பற்றிய வரிகளில் பெண்டிருடன் சிருங்காரம் செய்வதும், பின் (சீதை இல்லாவிடில்) உயிர் என்னாகும் என மருகும் வரிகளில் தனித்து சீதை பற்றி கனவுகளில் மூழ்குவதும் என அழகான தமிழ்ப்பாடலுக்கு அழகான நடனம் செய்கிறார். 




மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே.



குறுந்தொகை பாடல் - 319 திணை -- நெய்தல்  பாடியவர் --தாயங்கண்ணனார்.
--
ஆண் மான் பெண் மானைத் தழுவி மயக்கத்தோடு காடின் புதர்களிடயே ஒதுங்கவும், துதிக்கையால் தழுவிக்கொண்ட யானைகள் கருமேகம் சூழ்ந்த மலைகளைச் சேர
மாலை வந்தது பலத்த மழையும் வந்தது. 
என் பொன் மேனியை சிதைத்தவர் இன்னும் வரவில்லை; 
இனி என் உயிர் என்னவாகும் தோழி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...