புதன், 9 ஜூன், 2010

பழைய பரண்-- கவிதை 2.


அலுவலக வேலையாய் இந்தப் பக்கம் வர
எட்டிப் பார்த்து விட்டு சென்றவன்
ரயில் வர தாமதமானதும் என் ஞாபகம் வந்து
காபி குடித்துக் கிளம்பியவன்
கூட்டமொன்று முடிந்து கடைசி பேருந்து விட்டதில்
என் படுக்கையருகில் அயர்ந்து தூங்குபவன்
யாரையும் அழைக்க மறந்தால் வம்பென
பத்திரிக்கை தர வந்தவன்
என யார் யாரோ எது எதற்கோ வர
எனக்காக மட்டுமே வருபவனுக்காக
காத்திருந்து சோர்ந்திருக்கும் முன் வாசல்..

5 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...