ஞாயிறு, 10 ஜனவரி, 2010

புத்தகக்கண்காட்சி சில குறிப்புகள்..

 சென்னை புத்தககண்காட்சி போயிடு வர ஒவ்வொரு வருஷமும் ஆசைபடுவேன் (ஆசை மட்டும் தன)
இந்த வருஷமும் அப்படியே தான்.. அம்மாவிடம் ப்ளைட்டில் போயிட்டு வரேன் என்று சொன்னப்ப  இது ஆர்வமா இல்ல ஆர்வ கோளாறா  என்று கேட்டார்கள்.. 
எது எப்படியோ இந்த வருடமும் போகவில்லை (பயண செலவு லீவு இல்லை என காரணங்கள் சொல்லும் போது அறையில் இறைந்து கிடக்கும் இன்னும் படிக்காத புத்தகங்கள் கை கொட்டி சிரிக்கின்றன) 
சரி அப்படி வலை மேய்ந்து இந்த வருடம் என்ன புதுசு 
சாரு யாருடன் சண்டை கட்டினார்
குட்டி ரேவதி எஸ். ரா இருக்கும் ஸ்டாலுக்கு போனாரா?
ஜெயமோகன் விசிறிகள் சாரு விசிறிகள் மோதல் 
இப்டி எதாச்சும் சுவாரஸ்யமான  விஷயம் இருக்கிறத என்று வலை மேய்ந்தேன்..
தமிழ் இலக்கிய உலகில் சுவாரஸ்யங்களுக்கா பஞ்சம்.. நிறைய வலை பதிவர்கள், எழுத்தாளர்கள், பதிப்பகத்தார், கூட கொஞ்சம் வாசகர்கள் என களை கட்டி தான் இருக்கும் போல..
சந்திப்புகள், வம்பிழுப்புகள்,ரசனை பரிமாற்றங்கள், ஆதர்ச எழுத்தாளர்கள், புதிய தலைப்புகள் என சுற்றிலும் புத்தகங்களுடன்... இதை விட ஒரு வாசகனுக்கு வேறு என்ன வேண்டும்.. நிஜமாவகவே  ஒரு சின்ன திருவிழாவாக புத்தககண்காட்சி மாறி கொண்டு வருவதை உணர முடிகிறது..
வலை மேய்ந்ததில் கிடைத்த குரிப்புகுளை கொஞ்சமும் ஒழுங்கு இல்லாமல் இங்கே பதிவு செய்கிறேன் (இது அழகியல் காரனமாய் இல்லை சோம்பேறி தனத்தால் தான் என நீங்கள் நினைத்தாள் அது எப்படி ஏன் தப்பு ஆகும்)


 
 
புத்தகக்கண்காட்சி  சில குறிப்புகள்..

http://navinavirutcham.blogspot.com/2009/01/23-2.html
நவீன விருட்சம்..

மூணு புத்தகம் போடவே விழி பிதுங்கும் பொது உயிர்மை  65 புத்தகங்கள் வெளியிடு..
தன் கடை என்  147  என்பதையே அவ்வபோது மறந்து தொலைப்பவர் (என்னை போல)
ஒரு புத்தகமும் விற்காவிட்டால்  வரும் நஷ்டம் பற்றி முதலிலேயே சமாதானம் ஆகி கொள்கிறார்.
(நவீன விருட்சம் மூன்று புத்தகங்கள்: ஸ்டெல்லா ப்ரூஸ் கட்டுரைகள், அசோகமித்திரன் உரையாடல்கள், காசியபனின் 'அசடு')

வெளி ரங்கராஜன் கூட கொஞ்சம்சண்டை போட்டு இருக்கிறார் ( வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது கிடைததர்க்கான பாராட்டு கூடம் எந்த விளம்பரமும் இல்லாமல் நடந்தது குறித்து வருந்துகிறார்)


http://mykitchenpitch.wordpress.com

அவ்ளோ கூட்டத்துல ஒரு செகுரிட்டி செக்கும் இல்ல..

ஞானி ரொம்ப கூல்..  தன கருத்துக்களோடு மாறுபடும் இளைஞர்களோடு நிறைய நேரம் பேசினார்.
ரிசஷன் புலம்பல் இங்கும் உண்டு...



வெளி ரங்கராஜன் கூட கொஞ்சம்சண்டை போட்டு இருக்கிறார் ( வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது கிடைததர்க்கான பாராட்டு கூடம் எந்த விளம்பரமும் இல்லாமல் நடந்தது குறித்து வருந்துகிறார்)

பெரும்பாலான பதிப்பகங்களில் காணக்கிடைத்த ஒரு விஷயம், அங்கே salesல் இருப்பவர்கள் பலருக்கு புத்தகங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.








 வந்த சில பிரபலங்கள்:
ஜி கே மணி ராமதாஸ்
கமலஹாசன்
வைரமுத்து
நீயா நானா கோபி
கருணாநிதி
வைகோ
நடிகர் ராஜேஷ்
நடிகை சங்கீதா
விஜய் ஆனந்த் – உலக சினிமா பற்றி மக்கள் டிவியில் தொடர் செய்கிறாராம்.
வராதவங்க:
ஜெயமோகன்.. கொஞ்ச நாள் முன்னாடி தான் சென்னை வந்துட்டு போனாராம்.. தன் தளத்துல சொல்லி இருக்கார்..


கிழக்கு பதிப்பகம் இம்முறை 100 புத்தகங்களுக்கும் மேல் (அடேங்கப்பா!!) வெளியிட இருக்கிறது. அவர்களுடைய பல்வேறு இம்பிரிண்ட்களில் புத்தம் புதிய புத்தகங்கள் வருகின்றன. வழக்கமாக சரித்திரம், வாழ்க்கை வரலாறு போன்ற துறைகளில் புத்தகங்கள் இருக்கப் போகின்றன.

சாருவின் தளத்தில் இருந்து:
நான்  தினமும்  உயிர்மை  பதிப்பக  அரங்கில் மாலை 5 மணி முதல்  வாசகர்களையும்  நண்பர்களையும்  சந்திக்க இருக்கிறேன். உயிர்மை  கடை  எண்: p 12

வாருங்கள்; இந்தப் புத்தகக் கண்காட்சியை  கொண்டாடலாம்.
பின் குறிப்பு: இளையராஜா பற்றி மட்டும் தயவு செய்து கேள்விகள் கேட்க வேண்டாம். அப்படியும் கேட்பதற்கு விருப்பப்பட்டால் அந்த உரையாடலுக்கு மட்டும் விசேஷ கட்டணம்: 750 ரூ. (ஒரு முழு அப்சொலூட் வோட்காவின் விலை).
http://www.ularal.com/ (கொஞ்சம் பெரிய சுட்டிய இருந்ததால மூலதளத்தின் சுட்டி மட்டும் .. ரவி மன்னிப்பாராக.. :(  )

1. பாதி கடைகளில் கடன் அட்டை, பண அட்டைகளை வாங்கவில்லை. கையில் காசாக இல்லாததால் வாங்க எண்ணிச் சென்ற நூல்களையும் வாங்க வில்லை. அட்டைகள் மூலம் பணம் செலுத்த மொத்த புத்தக காட்சிக்கும் சேர்த்து ஒரு ஏற்பாடு செய்யலாம்
2. அரங்க வரைபடம் கண்காட்சி வரவேற்பரையில் கிடைக்கவில்லை. அரங்க எண்கள் வரிசையில் எந்த logicம் இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து இருக்குமாறு அரங்க எண்கள் வரிசை இருக்க வேண்டும்.
3. நான் வாங்க நினைத்த புத்தகம் எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியவில்லை. தேடிக் களைத்தேன். இந்த நூல் இந்த இந்த கடைகளில் கிடைக்கும் என்று ஒரு அச்சடித்த பட்டியல் அல்லது ஒரு தொடுதிரைக் கணினி / உதவி மையம்.
4. ஒவ்வொரு கடைக்கும், முடிந்தால் மொத்த கண்காட்சிக்கும் ஒரு “அதிகம் விற்ற நூல்கள்” பட்டியல்.
5. அரங்கிற்கு வந்து செல்ல முக்கிய இடங்கள் வழியாக வாடகைப் பேருந்துகளை இயக்கலாம்.
(நம்ம சொல்றதெல்லாம் கேக்கவா போறாங்க ரவி !!)
நிறைய தாடி வளர்த்தவர்கள், சே குவாரா ஹோ சி மின்  டி ஷர்ட் போட்டவர்கள்  புத்தகம் பற்றி கேட்டல் மட்டும் திரு திரு என முழிப்பவர்கள் பற்றி தமிழ் புத்தககண்காட்சியில் ' boy in striped pyjamas'  ஆங்கில புத்தகம் வாங்க போனவர் pulambukirar (அதை அடுத்த நாள் landmark இல் வாங்கினாராம்.. மொத  நாளே அங்க போய் இருக்கலாம்)  --


Agnikunju.blogspot.com
மிக தோழமையான பதிவர் சந்திப்புகளும் நிகழ்ந்துள்ளன.. இணையம் நிச்சயமாக தமிழ் புத்தக வாசிப்பு குறித்த ஈர்ப்பு உள்ளவர்களை அடுத்தடுத்த படிகளில் கொண்டு போய் விடும் சூழ்நிலையை கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது..

நட்சத்திர பதிவர் (!)  லக்கி லூக் 
எனக்கும் கூட புலிநகக்கொன்றை, விஷ்ணுபுரம், பிரமிளின் முழுத்தொகுப்பு, சுந்தரராமசாமி சிறுகதைகள், நகுலன் கவிதைகள், அ.மார்க்ஸ், துருக்கித் தொப்பி என்றெல்லாம் பட்டியலிட ஆசையாக இருந்தாலும், வாங்கித் தொலைத்தவற்றையே பட்டியலிட வேண்டும் என்ற நேர்மையும், அறமும் இருப்பதால் இப்பட்டியலை வெளிப்படையாக நீதிபதி சொத்துக் கணக்கு வெளியிடுவது மாதிரி வெளியிடுகிறேன்.
என்று புத்தக பட்டியல் வெளியிட்டுள்ளார் (அதை அவர் வலைப்பூவுலையே போய் பாருங்க) http://www.luckylookonline.com/

இன்னும் நிறைய பேர் எழுதி இருக்காங்க.. மும்பைல இருந்துட்டு சென்னைக்கு ஓசி டிக்கெட் குடுத்த வலைப்பதிவர்களுக்கு நன்றி...


2 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...