திங்கள், 4 ஜனவரி, 2010

எதையாவது செய்



எழுத என்ன இருக்கிறது?
ஆயிரம பூக்களுக்கு பின்
ஆயிரத்து ஒன்றாம் அரும்பு

எல்லாம் முடிந்து விட்டது என சலிக்கும் போது
ஒரு ஊர்க்குருவி கீச் ஒலி எழுப்பி
சட்டென பறக்கிறது..
அதை என்ன செய்ய?

தின்னத் தின்னப் பசி.
கோப்பை தீரத் தீர தாகம்.

எழுது
படி
அழு
சிரி
ஆடு
அலை
தேடு
புணர்
காண்
கொள்
உணர்

எதையாவது செய்
கொஞ்ச நாள் தானே
இருந்து விட்டு தான் போயேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...